தொடர்புடைய செய்திகள்
- மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பேருந்து; 4 பேர் பலி
- ‘காலா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷின் ‘வடசென்னை’
- திமுக உயர்நிலைக் குழு கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது
- கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பேருந்து விபத்தில் பலி
- விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தலில் ஞானவேல்ராஜா அதிர்ச்சி தோல்வி
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து; ரயில் சேவை பாதிப்பு
சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் கடந்த 7 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவு ரயில் பாதையில் ஒரு சில புறநகர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 மணிநேரமாக இதே நிலை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.வேலைக்கு செல்லும் பயணிகள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்னும் மூன்று நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்கள் புறப்படும் என சென்னை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
