1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Electric train accident in chennai

சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து; ரயில் சேவை பாதிப்பு

சென்னை
சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் கடந்த 7 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவு ரயில் பாதையில் ஒரு சில புறநகர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7 மணிநேரமாக இதே நிலை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.வேலைக்கு செல்லும் பயணிகள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் இன்னும் மூன்று நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில்கள் புறப்படும் என சென்னை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
ஆண் வேடத்தில் நடித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது