வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (10:46 IST)

மொழி திணிப்பிற்கு இடமில்லை: தமிழில் டிவிட் போட்ட ரமேஷ் பொக்ரியால்!!

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது என தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
 
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.   
 
தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 
 
அதாவது தமிழகத்தில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழி கொள்கை என மறைமுகமாக மொழித் திணிப்பு நடத்தப்படும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி புதிய கல்வி கொள்கை குறித்து விளக்கம் அளித்தார். இதன் தமிழ் ஆக்கத்தை பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில்  தேசிய கல்விக் கொள்கை (NEP) நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.