1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (15:22 IST)

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை ஜூலை 15 ஆம் தேதி வெளியாகுமென மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச்  மாதத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடௌபெற்றது.

இதற்கிடையே கொரோனா அச்சம் காரணமாக சில பாடங்களுக்காகன் தேர்வுகள் மட்டும்  மாணவர்களின் நலனுக்காக ரத்து செய்யப்பட்டன.

பின்னர் மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில்  ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண் வழங்கவேண்டுமென கடந்த மாதம் 26 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்தது.

இந்நிலையில், சிபிஎஸ்இ12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு  முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சிபிஎஸ்இ  10 வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பதிவிட்டுள்ளார்.