தொடர்புடைய செய்திகள்
- இனிமேல் நாங்களும் ரஜினியை கொண்டாடுவோம்! – பல்டி அடித்த சீமான்!
- புத்தாண்டு கட்டுப்பாடு; ஹோட்டல்கள், கடற்கரையை மூட உத்தரவு – கடும் கண்காணிப்பில் சென்னை
- எங்க தலைமையில்தான் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் யார்? – பரபரப்பை கிளப்பும் பாஜக!
- நான் கேள்வியும் கேட்பேன்.. ரஜினிகிட்ட ஆதரவும் கேட்பேன்! – கமல்ஹாசன் பேச்சு!
- பொங்கல் டோக்கனை அதிமுகக்காரங்க ஏன் தறாங்க?! – கோர்ட்டுக்கு சென்ற திமுக!
அதிமுகவின் ஒரு தொண்டரை கூட ஸ்டாலினால் தொட முடியாது! – எடப்பாடியார் பதிலடி!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இரண்டாக உடைய போவதாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி “நாட்டுக்காக உழைத்த நல்லவர்களால் உருவாக்கப்பட்டது அதிமுக. அதை ஸ்டாலின் உடைக்க பார்க்கிறார். அதிமுக உடைந்துவிடும் என அவர் கனவு காண்கிறார். ஆனால் அவரால் அதிமுகவை உடைக்க முடியாது. அதிமுகவின் தொண்டர் ஒருவரை கூட ஸ்டாலினால் தொட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
