தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மருத்துவர்களுடன் கட்டுபாடுகள் குறித்து ஆலோசனை!
- என் தந்தை காமராஜர்.. என் சொத்து எம்ஜிஆர்! – கமல்ஹாசன் பேச்சு!
- காலை பிடித்து, காலையும் வாரி விட்டாச்சு - எடப்பாடியாரை வம்பிற்கு இழுத்த உதயநிதி!
- சவரனுக்கு ரூ.128 உயர்ந்த தங்கம் விலை! – இன்றைய விலை நிலவரம்!
- தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கருணாநிதி போலவே நானும் முதல்வர் ஆனேன் - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரானது போலவே நானும் முதல்வர் ஆகியுள்ளேன் என எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை ஊர்ந்து சென்று முதல்வர் ஆனவர் என விமர்சித்தார்.
இதற்கு, கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேசிய அவர் “ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பாம்பா? பல்லியா? நடந்து சென்றுதான் முதல்வர் ஆனேன் என முன்னர் கூறினார். இதனைத்தொடர்ந்து அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரானது போலவே ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி திமுகவினரை மேலும் தூண்டிவிட்டுள்ளார்.
