1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy angry with sengottaiyan

எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி செய்த செங்கோட்டையன்?!.. கோபத்தில் பழனிச்சாமி!...

sengottaiyan
அதிமுகவில் 50 வருடங்களுக்கு மேல் பயணித்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி காலம் வரை பலமுறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார். கொங்கு மண்டலமான கோபிசெட்டிபாளையத்தில் பலமுறை வெற்றி பெற்றவர் செங்கோட்டையன்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பலரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் சொன்னதால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார் செங்கோட்டையன். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பாக  விசில் சின்னத்தில் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

அதேநேரம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற தவெகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களை கொடுத்தும் கூட ஆட்சியமைக்க இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறார்கள். தேர்தல் முடிவு வெளியான அன்று தவெக ஆட்சியமைக்க 10 எம்எல்ஏக்கள் தேவை என்கிற நிலை இருந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் சிலரிடம் பேசி அவர்களை தவெகவுக்கு கொண்டுவர செங்கோட்டையன் முயற்சியதாக சொல்லப்படுகிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தவே அதிமுக எம்எல்ஏக்களை தற்போது புதுச்சேரியில் அவர் தங்க வைத்திருக்கிறார் என்கிறார்கள்..

About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்.. ஈரோடு முதலிடம்.. வேலூர் கடைசி இடம்..! வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்..!