1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ed raid continue in pudhukottai

புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் வீட்டில் விடிய விடிய சோதனை..அமலாக்கத்துறை அதிரடி

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அமலாக்கத்துறை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று 8 இடங்களில் சோதனை நடந்த நிலையில், கந்தர்வகோட்டை அறியானிப்பட்டி, புதுக்கோட்டை தனியார் ஆர்க்கிடெக் நிறுவனத்தில் நடந்த சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் மற்ற  6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! சென்னையில் பரபரப்பு..!