1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Do weeping beggars talk about dignity? Khushboo retaliates against Rahul

அழுது…கெஞ்சியவர்கள் மானத்தை பற்றி பேசுவதா…?.ராகுலுக்கு குஷ்பு பதிலடி

ராகுலுக்கு குஷ்பு பதிலடி
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்று ஆயிரம் விளக்குத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு ராகுலாந்திக்குப் பதிலவி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி மானமுள்ள தமிழர்கள் பலர் காலில் விழ மாட்டார்கள் எனக் கூறினார்.

இதற்குப் பதிலடியாக நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் அழுததை மறந்துவிட்டார?  கூட்டணி குறித்துப் பேசுகையில் திமுக அவமரியாதை செய்தாக வேதனைபப்ட்டு பேசியவது அவருக்கு தெரியவில்லையா? அழுதும் கெஞ்சியும் தானே 25 சீட்டுகளை வாங்கினார்கள்.. இதன் பிறகும் காங்கிரசுக்கு மானம் இருக்கிறதா எனத்தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடி வருகை; புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!