தொடர்புடைய செய்திகள்
- சலசலப்புக்கு திமுக என்றைக்கும் அஞ்சாது: ஸ்டாலின் பொளேர்!
- திமுக எம்.எல்.ஏக்கள், வக்கீல்கள் வாக்குவாதம்: சர்ச்சையாகும் கைது!
- Waiting List-ல் தயாநிதி மாறன்: ஆர்.எஸ்.பாரதி கைதை கொண்டாடும் எச் ராஜா!!
- யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடா: ஆர்.எஸ்.பாரதி!!
- திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக இருப்பதாகவும் பேசினர். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இது சம்மந்தமாக அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இப்போது அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம், இன்று அதிகாலை அவர் வீட்டில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்துள்ளனர். இது கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றது.
விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்து விசாரித்த பின்னர் சென்னையில் கைதான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கழறிஞர் செய்தி தெரிவித்துள்ளார். '
மேலும், ஜூன் 1ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி ஜாமீன் பெற மனு செய்யலாம் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
