தொடர்புடைய செய்திகள்
- மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- விஜயகாந்த்
- திறனற்ற திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம்: அண்ணாமலை ஆவேசம்..!
- தண்டட்டி படமும் அண்டாவக் காணோம் படமும் ஒரே கதையா?... இயக்குனர் அளித்த விளக்கம்!
- அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி...
- இருசக்கர ஊர்தி, மகிழுந்துகளுக்கான சாலைவரியை ரூ.1000 கோடி உயர்த்த முடிவா? அன்புமணி ராமதாஸ் டுவீட்
தமிழக ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்: மதுரை திமுக நிர்வாகி மிரட்டல்
தமிழக ஆளுநரை வரும் 27ஆம் தேதிக்குள் மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் என திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டல் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார்.
ஆகவே, ஒன்றிய அரசே உடனடியாக தமிழகத்தில் இருந்து வரும் 27ம் தேதிக்குள் ஆளுநரை மாற்ற வேண்டும். மாற்றாவிட்டாடல் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியின் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
