தொடர்புடைய செய்திகள்
- ஆளுனர் – ஆளும் கட்சி மோதல் உச்சம்; சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!
- உரையை மாற்றி வாசித்தது ஏன்? கவர்னர் அலுவலகம் விளக்கம்!
- நாங்க முதல்வர் பேச்சை கேட்க வரலை.. ஆளுநர் உரை கேக்கதான் வந்தோம்! – எடப்பாடி பழனிசாமி!
- தமிழ்நாடு விட்டு ஆளுனர் பயந்து ஓடும் காலமும் வெகு விரைவில்.. செந்தில் குமார் எம்பி டுவிட்!
- தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை படிக்கவில்லையா கவர்னர்? முதல்வர் கண்டனம்
ஒரு பிடி மண்ணு கூட இங்கு இருந்து எடுத்துட்டு போக முடியாது: கவர்னர் குறித்து திமுக எம்பி டுவிட்
நேற்று சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரல் ஆகி வரும் நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், இது எங்க கோட்டை, ஒரு பிடி மண்ணு கூட இங்கிருந்து எடுத்துட்டு போக முடியாது, வெளியே போ என்று கூறும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மூலம் அவர் நேற்றைய கவர்னர் நிகழ்ச்சியை மறைமுகமாக கூறியுள்ளார் என்பது தெரிய வருகிறது.
மேலும் இந்த டுவிட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய சட்டசபை நிகழ்வின்போது கவர்னர் சட்டசபையை விட்டு வெளியேறும் போது வெளியே போ என அமைச்சர்கள் உள்பட திமுக எம்பிக்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
