தொடர்புடைய செய்திகள்
- உளராத மேன்... பொன்னாருக்கு பொளேர் விட்ட பாரதி!!
- ”முரசொலி நிலத்தை திரும்ப கொடுங்கள்.. 5 கோடி தருகிறோம்” ஸ்டாலினுக்கு சவால் விடும் பொன்னார்
- மக்களவைத் தேர்தலில் ஏமாந்துட்டோம்…. ஆனா உள்ளாட்சி தேர்தல்ல ? – அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக !
- ஓபிஎஸ் வரட்டும்; அதோட தினகரன் ஆட்டம் க்ளோஸ்... புகழேந்தி ஆன் ஃபயர்!
- அடிமாட்டு விலைக்கு பிடுங்கப்பட்டதா அறிவாலய இடம்? நமது அம்மாவின் கட்டுரையால் பரபரப்பு
ஃபாத்திமா தற்கொலை விவகாரம்; யாரை காப்பாற்ற முயற்சி?? கனிமொழி ஆவேசம்
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஃபாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இது குறித்த விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய உயர்கல்வித் துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் திமுக எம்.பி.கனிமொழி, ”ஃபாத்திமா தற்கொலை விவகாரத்தில் இது வரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது?” என மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
