வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anadakumar
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:14 IST)

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட கலெக்டர்..

மத்திய மற்றும் மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகள் பெற்ற ஆசிரியர்களை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பாராட்டினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கரூர்  அடுத்த க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணன்,  மற்றும் மாநில அரசு நல்லாசிரியர் விருதுகள் பெற்ற குளித்தலை அடுத்த  பொய்யாமணி  ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி  தலைமை  ஆசிரியர்  முத்துலட்சுமி, கள்ளை  ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி  தலைமையாசிரியர்  ராஜேஸ்வரி, மணவாசி  ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளி  தலைமை ஆசிரியர்   தேன்மொழி,  கார்வழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  வாசுதேவன்,  கொங்கு  உயர்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்  மோகன்  உள்ளிட்ட 10 நபர்களை கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்களால் பாராட்டு பெற்றனர்.