தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை.. திமுக விமர்சனத்தால் பரபரப்பு..
- அதிமுகவை தொட்டுவிட்டார்.. இனிமேல் விஜய்யை சும்மா விடமாட்டோம்.. ராஜன் செல்லப்பா
- பெரம்பலூரில் ரவுடி சுட்டு கொலை.. போலீஸ் என்கவுண்டரால் பரபரப்பு..!
- அதிமுக கூட்டணி அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு பிளாக்மெயில் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்..!
- 234 தொகுதிகளிலும் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!
அதிமுகவை நேரடியாக விமர்சித்தால் பதிலடி தருவோம்.. விஜய்க்கு ஜெயக்குமார் எச்சரிக்கை..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் ஆற்றிய உரையில், "ஆண்ட கட்சி மற்றும் ஆளும் கட்சியின் ஊழல்களை ஒழிப்போம்" என்று பிரதான திராவிட கட்சிகளை சாடியிருந்தார். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுகவைத்தான் விஜய் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மிகவும் சாதுரியமான விளக்கத்தை அளித்துள்ளார். "விஜய் 'ஆண்ட கட்சி' என்று பொதுவாக கூறியிருப்பது எங்களை மட்டும் குறிக்காது. அதிமுகவிற்கு முன்னால் காங்கிரஸ் கட்சியும் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளது. ஒருவேளை அவர் காங்கிரஸ் கட்சியைக்கூட விமர்சனம் செய்திருக்கலாம்" என்று மழுப்பலாக கூறினார். மேலும், "எங்களைப் பற்றி அவர் நேரடியாக குறிப்பிட்டு விமர்சனம் செய்தால் மட்டுமே நாங்கள் பதிலடி தருவோம். அதிமுகவை நேரடியாக சீண்டினால் அதற்கான தக்க பதில் கிடைக்கும்" என்றும் எச்சரித்தார்.
மற்ற அதிமுக தலைவர்கள் விஜய்யை ஆக்ரோஷமாக விமர்சித்து வரும் நிலையில், ஜெயக்குமார் மட்டும் "நேரடியாகச் சொன்னால் பார்ப்போம்" என்று நிதானம் காப்பது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் விமர்சனங்களை இப்போதைக்கு தங்கள் பக்கம் திருப்பிக்கொள்ள வேண்டாம் என்ற அதிமுகவின் ஒரு தரப்பு உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது.
Edited by Siva
