தொடர்புடைய செய்திகள்
- நீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்
- கர்நாடகம் முதல்வருக்கு இறுதிச் சடங்கு நடத்தி விவசாயிகள் போராட்டம்!
- 3000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு; இதுக்கு மேல முடியாது! – கர்நாடக அரசு திட்டவட்டம்!
- உழவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்
- பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உழவர் உயிரிழப்பு: காவிரித் தாய் கண்ணீர் வடிப்பாள்! ராமதாஸ் உருக்கம்..!
காவிரி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தமிழக டிஜிபி எச்சரிக்கை
காவிரி விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பழைய வீடியோக்களை தற்போது நடந்ததை போல சித்தரித்து பரப்பப்பட்டு வருவதாக புகார் வந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கடந்த சில மண் நேரங்களாக தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களையும், பழைய வீடியோக்களை தற்போது நடந்தது போல் சித்தரித்து ஒருசிலர் வெளியிட்டு வருவதை அடுத்தே டிஜிபி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Edited by Mahendran
