தொடர்புடைய செய்திகள்
- மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்! - சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு !
- பிரதமர் எவ்வளவு புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது! – பிரதமர் மோடி விசிட்டை விமர்சித்த தங்கம் தென்னரசு!
- 6 முறை தென்காசியில் தோல்வி.. மீண்டும் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடும் கிருஷ்ணசாமி..!
- சிறுபான்மையின மக்களுக்கு கழக அரசு எப்போதும் அரணாக இருக்கும்-உதயநிதி!
- புதிதாக திருவோணம் தாலுக்கா உருவாக்கம்!
ராமர் கோயில் கட்டியதற்கு யாராவது ஓட்டு போடுவார்களா? தயாநிதி மாறன் கிண்டல்..!
ராமர் கோவில் கட்டியதற்கெல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவில் பேசிய தயாநிதிமாறன் தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் புரட்சியை செய்தனர் என்றும் பத்தாண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்து திமுகவை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் நான்காவது வளர்ச்சி அடைந்த நகரமாக மதுரை உள்ளது என்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் ரூ18 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்
மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர் மீது பாசம் இருப்பது போல் நடிக்கிறார் என்றும் இதே போல் தான் கேரளா, கர்நாடகா சென்றாலும் கூறுவார், கோழி கூவுவது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது மொழியில் பேசி வாக்குகளை களவாட பார்க்கிறார் என்றும் தெரிவித்தார்
பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டியதற்கெல்லாம் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் தான் முட்டாள்கள் என்று தயாநிதி மாறன் பேசியுள்ளார்
Edited by Siva
