தொடர்புடைய செய்திகள்
- ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
- இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?
- கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!
- இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?
- இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!
சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!
சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ள நிலையில், விரைவில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, 9 துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அனைவரும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
