புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் ஆயதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகிலுள்ள விடுதி என்ற கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் திங்கட்கிழமை இரவு பெரியார் சிலையை சேதப்படுத்தினர். தலை துண்டித்த நிலையில் காணப்பட்ட பெரியார் சிலையைப் பார்த்து ஆவேசமடைந்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழகமெங்கும் நேற்று போராட்டம் வெடித்தது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களது கண்டணங்களை...