1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Covai DMK is divided into two

இரண்டாக பிரிந்தது திமுக: அன்பழகன் வெளியிட்ட பரபர அறிக்கை!!

திமுக
திமுக நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுவதாக க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
ஆம், கோவை மாநகர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். கோவை  57 வார்டுகளுடன் செயல்பட்டு வருவதால் நிர்வாக வசதிக்காக கோவை திமுக இரண்டாக பிரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 
 
14 வார்டுகள் சேர்க்கப்பட்டு கோவை மாநகர் கிழக்கு பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்.எல்.ஏ.வும், 29 வார்டுகளை கொண்டு புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பணியின் போது துப்புரவு பணியாளர் இறந்தால் ஒரு கோடி; ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை