ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (18:23 IST)

தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா உறுதி !! 25 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 2341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,41,488 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,352 ஆகும். இதுவரை மொத்தம் 711198 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் இன்று மட்டும்  25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,124 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரொனாவால் இன்று மட்டும்  603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,04,258 பேராக அதிகரித்துள்ளது.