1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (10:21 IST)

வீச காத்திருக்கும் கொரோனா 2 ஆம் அலை? மருத்துவர்கள் எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியதால் கொரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை. 

 
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் இந்திய அளவிலான கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதன்படி, தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
சென்னை தவிர்த்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.