தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் பாஜக ஆட்சி தான்.. இந்தியா கூட்டணி படுதோல்வி அடையும்.. இந்தியா டிவி - CNX கருத்துக்கணிப்பு..!
- தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பவர்களுடன் எதற்கு கூட்டணி? சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கேள்வி
- அன்புமணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய்.. புதிய கூட்டணியா?
- தமிமுன் அன்சாரி கோரிக்கையை ஏற்று அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்டமன்றத்தில் பரபரப்பு
- பாஜக உடன் கூட்டணி தொடரும்.. ஏ.சி.சண்முகம் உறுதி..!
அதிமுக கூட்டணியில் இணைகிறதா காங்கிரஸ்? 20 தொகுதிகள் தர ஈபிஎஸ் தயாரா?
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக்கபட்டதும் ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தமிமுன் அன்சாரி அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில் எஸ்டிபிஐ கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒன்பது தொகுதிகள் மட்டுமே திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நிலையில் 20 தொகுதிகள் தர எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜக என்ற ஒரே ஒரு கட்சி விலகியதன் காரணமாக திமுக கூட்டணி சிதறு தேங்காய் போல் உடைந்து வருவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி புத்திசாலித்தனமாக சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அது மட்டும் இன்றி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது திமுகவுக்கு பெரும் சரிவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
