தொடர்புடைய செய்திகள்
- UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!
- ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து ஆதரவாளர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது..! சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்..!!
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!
- அனைத்து மக்கள் நீதி கட்சியின் சார்பில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!
- கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை அருகே உள்ள மேலூர் அரசு கலைக் கல்லூரியில், ஏ.ஐ.எஸ்.எஃப் அமைப்பு மாணவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் ராஷித் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், மாநிலக் குழு உறுப்பினர் சேதுபாண்டி மற்றும் சதிஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் மதுமிதா, கல்லூரி நிர்வாகிகள் கிஷோர், பிரவீன், பிரதாப் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வகுப்பை புறக்கணித்தனர்.
இதில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
