தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
- விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்! – கோவையில் பரபரப்பு!
- தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- கல்லூரியில் மாணவனுக்கு மொட்டை அடித்து ராகிங்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்
- கோவை தனியார் கல்லூரியில் ராகிங் கொடுமை! – 7 மாணவர்கள் கைது!
கோவையில் குண்டு வெடிக்கவுள்ளதாக மர்மநபர் மிரட்டல்: கமிஷனர் விளக்கம்
பொதுமக்கள் இன்று சந்தோசமாக தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் கோவையில் குண்டுவெடிக்கும் என மெயில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கோவை நகர காவல்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் குண்டு வெடிக்க உள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் மெயில் அனுப்பிய நிலையில் இந்த மெயில் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் கோவை முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே குண்டு வெடிப்பு என்ற பதட்டம் இன்றி தீபாவளியை பொதுமக்கள் மகிழ்ச்சி உடன் கொண்டாடலாம் என கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் கோவை குண்டு வெடிப்பு என மிரட்டல் இமெயில் வந்தாலும் காவல்துறை ஆணையரின் இந்த பேட்டியை அடுத்து பொதுமக்கள் அங்கு மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடி வருகின்றனர்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
