1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (15:00 IST)

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துள் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த விபத்தில் உயிரிழந்த மூவருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
 
 இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விருதுநகர் மாவட்டம் மற்றும் நாட்டார் மங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் ஆறுமுகம் மற்றும் குபேந்திரன் ஆகியோர் உயிரிழந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
 
மேலும் இவ்விபத்தில் காயமடைந்த தெய்வேந்திரன், கணேச பாண்டி ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன்
 
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரன் அவர்களுக்கு ஒரு லட்சம் உடனடியாக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது