தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்!; மதுரை கிளை நீதிமன்றம்!
- நோட்டா ஜி இன்னும் பச்ச கொடி காட்டலையா? ஈபிஎஸ்-ஐ கலாய்ந்த உதயநிதி!
- அதிவேகமாய் சென்ற கடத்தல் லாரி; டூவிலரில் துரத்திய அதிகாரிகள்! – நள்ளிரவில் சேஸிங்!
- அண்ணன் ஓபிஎஸ்-க்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்? உதயநிதி ஷாக்!
- போலி இ-மெயில் விவகாரம்; யூட்யூபர் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு!
எம்ஜிஆர் சிலையை அவமதித்தவர்களை தோலுரித்து காட்ட வேண்டும் – எடப்பாடியார் கண்டனம்!
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “புதுச்சேரியில் உள்ள எம்ஜிஆர் சிலை காவித்துண்டு அணிவித்து அவமானப்படுத்தப்பட்ட கொடுஞ்செயல் அறிந்து வேதனையடைந்தேன். சமூகத்திற்காக பணியாற்றிய தலைவர்களின் சிலை அவமானப்படுத்தப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. ஒற்றுமை, சமத்துவத்தை குலைக்கும் வண்ணம் ஓட்டு அரசியலுக்காக சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதை ஏற்க முடியாது. எம்ஜிஆர் சிலையை அவமதித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னாலிருந்து செயல்பட்டவர்கள் தோலுரித்து காட்டப்பட வேண்டும். சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதல்வர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
