1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (18:20 IST)

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை : மீட்பு பணி தீவிரம்

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே, நடுக்காட்டுப் பட்டியில் ஒரு வீட்டில் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 2 வயதுள்ள  குழந்தை தவறி விழுந்தது.
 
அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தற்போது குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.