தொடர்புடைய செய்திகள்
- தரமுயர்ந்து ஸ்டைலாக மாறிய இலவச மிதிவண்டிகள்: தவெக அரசின் புதிய மைல்கல்!
- பள்ளி மாணவர்கள் கரோல் பாடி சென்றபோது தாக்குதல்.. சங்பரிவார் காரணம் என பினராயி விஜயன் குற்றச்சாட்டு..!
- ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய பள்ளி மாணவர்கள்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!
- மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா? 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு!
- வகுப்பறையில் திடீரென மாணவன் அடித்த பெப்பர் ஸ்பிரே.. 10 பேர் பாதிப்பு.. ஒரு மாணவன் ஐசியூவில்..!
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: செப்டம்பர் 17-ல் தொடக்கம்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' அடுத்த கட்டமாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்திட ஏதுவாக, முதற்கட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கிய முடிவின் மூலம், நடுநிலை வகுப்புகளில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் வருகைப்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கான இந்த விரிவாக்க திட்டத்தை எவ்விதத் தொய்வுமின்றி, குறித்த காலத்தில் செம்மையாக தொடங்குவதற்கான வழிமுறைகள் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன
Edited by Siva
