ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய பள்ளி மாணவர்கள்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!
எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க விழாவின்போது கேரள பள்ளி மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். கீதம் பாடிய வீடியோ, மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி, அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரான செயல் என கூறி, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு நிகழ்வுகளில் குழந்தைகளை பயன்படுத்தி, எந்தவொரு குழுவின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதும் அரசியலமைப்பு மீறலாகும்" என்று அவர் தெரிவித்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், வகுப்புவாத கொள்கை கொண்ட ஒரு அமைப்பின் கீதத்தை அரசு நிகழ்வில் சேர்த்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ரயில்வே நிர்வாகம் சங் பரிவார் அரசியலால் குலைக்கப்பட்டுவிட்டதாகக்குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறியபோது, அது ஒரு தேசபக்தி மலையாள பாடல் என்றும், மாணவர்கள் தாமாக விரும்பி பாடினர் என்றும் கூறினார்.
Edited by Siva