தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மாரத்தான் போட்டி.. இன்று போக்குவரத்தில் திடீர் மாற்றம்..!
- வந்தே பாரத் ரயில் கட்டணத்தை விட அதிகம்.. கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்..!
- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவர்கள் தகவல்
- கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தயார்: ரயில்வே துறை
- அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!
சென்னை தாம்பரம் - கடற்கரை ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவஸ்தை..!
சென்னை தாம்பரம் கடற்கரை மின்சார ரயில் திடீரென நிறுத்தப்பட இருப்பதை அடுத்து பயணிகள் கடும் அவஸ்தை அடைந்து பேருந்துகளில் செல்லும் நிலை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளன.
தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் ரயில் சேவை வழக்கம் போல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பேருந்துகளில் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
