தொடர்புடைய செய்திகள்
- வந்தே பாரத் ரயில் கட்டணத்தை விட அதிகம்.. கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்..!
- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவர்கள் தகவல்
- கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தயார்: ரயில்வே துறை
- அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!
- எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் - திருமாவளவன்
சென்னையில் மாரத்தான் போட்டி.. இன்று போக்குவரத்தில் திடீர் மாற்றம்..!
சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற இருப்பதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரத்தான் போட்டி நடைபெறுவதை அடுத்து மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீஞ்சூரில் இருந்து 400 அடி வெளிவட்ட சாலையில் வண்டலூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் செங்குன்றம் ஆர்டிஓ பாலம் சேவை சாலை வழியாக திருப்பி விடப்பட்டு புழல் - தாம்பரம் உள்பட்ட சாலை வழியாக வண்டலூர் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவள்ளூர் நெடுஞ்சாலையிலிருந்து வரும் கனரக வாத வாகனங்கள் காந்திநகர் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு 400 அடி வெளிவட்ட சாலை வழியாக மீஞ்சூர் அல்லது ஜிஎன்டி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு புழல் - தாம்பரம் உள்பட்ட சாலை வழியாக செல்லலாம்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
