தொடர்புடைய செய்திகள்
- பிரபல தொழிலதிபரை காதலிக்கும் பாகுபலி ரானா!
- மருத்துவர் தற்கொலை வழக்கில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ கைது: பெரும் பரபரப்பு
- இன்ஸ்டாகிராம் காதலியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸில் வந்த வாலிபர்: போலீசில் சிக்கியதால் பரபரப்பு
- விஷால் வீட்டு நிகழ்ச்சியில் தான் என் காதலியை சந்தித்தேன் - விஷ்ணு விஷால் கூறிய ரகசியம்!
- கொரோனா வைரஸை எதிர்த்து போராடிய மருத்துவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டது ஏன்?
ஊரடங்கால் காதலியை பார்க்க முடியவில்லை: சோகத்தில் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்
கொரோனா வைரஸ் காராணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியாத சோகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்ற 26 வயது இளைஞர் தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் அவரால் கடந்த 40 நாட்களாக காதலியை பார்க்க முடியவில்லை.
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஹரிபிரசாத் திடீரென தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விசாரணை செய்த போது காதலியை பார்க்க முடியாத சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹரிபிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்து வரும் போலீசார் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்
