1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai road accident two person killed

தாறுமாறாக ஓடிய கார் ; 2 பேர் பலி : சென்னையில் அதிர்ச்சி

Road accident
சென்னையில் இன்று காலை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 
சென்னை எம்.ஆர்.சி.நகர் பேருந்து நிலையம் அருகே சாந்தோமில் இருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்று ஒரு சொகுசு கார், முன்னால் சென்ற வாகனங்கள் மீது இடித்து மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த இந்த விபத்தால் 6 பேர் படுகாயமடைந்தனர். 
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வழக்கறிஞர் ரீகன் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சிலை கடத்தல் விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை