1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Paadi bridge accident

பாடி மேம்பாலத்திலிருந்து பயணி விழுந்து சாவு! – சென்னையில் பரபரப்பு!

Chennai
சென்னையில் பாடி மேம்பாலத்தில் மது அருந்திய ஆட்டோ டிரைவர் ஏற்படுத்திய விபத்தில் பயணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் டிவி மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் பாக்கியராஜ். நேற்று முன்தினம் இவர் தனது நண்பரை சந்தித்துவிட்டு பிரபாகரன் என்பவரது ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். ஆட்டோ பாடி மேம்பாலத்தில் செல்லும்போது மது அருந்தியிருந்த பிரபாகரன் வேகமாக சென்று பாலத்தின் தடுப்பில் மோதியதால் பாக்கியராஜ் தவறி விழுந்தார்.

பாலத்தின் மீதிருந்து 25 அடி உயர பள்ளத்தில் விழுந்ததில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
10,11,12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள்! – பள்ளிக்கல்வித்துறை தகவல்!