தொடர்புடைய செய்திகள்
- ’சென்னையில் மனைவிக்கு சுய நினைவு இழப்பு’- பாகிஸ்தான் முன்னாள் வீரர் உருக்கம்
- தமிழகத்தின் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- தொடர் சரிவில் தங்கம் வெள்ளி விலை: கிராம் ரூ.5000க்கு குறையுமா?
- நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- சென்னை-புதுச்சேரி கப்பல் சேவை இன்று முதல் தொடக்கம்.. தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!
அடுத்த 3 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் கீழடுக்கு சுழற்சி மற்றும் ஒரு சில காரணங்களால் பிப்ரவரி 28 முதல் மார்ச் இரண்டாம் தேதி வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் நாகப்பட்டினம் திருவாரூர் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை அல்லது லேசான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட மற்ற பகுதிகளில் இன்றும் வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும் கூடுதல் ஆன வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
