தொடர்புடைய செய்திகள்
- எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டதால் பரபரப்பு..
- இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்தது தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!
- முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி முறைகேடு வழக்கு: ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு..!
- சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றி அவமரியாதை: அதிமுகவினர் குவிந்ததால் பதட்டம்..!
- சென்னை அருகே வானில் தென்பட்டது பறக்கும் தட்டா? விஞ்ஞானி விளக்கம்
சென்னை - மதுரை தேஜஸ் ரயில் இனி இந்த ஊரிலும் நிற்கும்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சென்னை மதுரை தேஜஸ் ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் நிலையில் தற்போது கூடுதலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சென்னை மதுரை இடையில் ஆன சூப்பர் பாஸ்ட் தேஜஸ் ரயில் தினமும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயில் மதுரைக்கு 6:15 மணி நேரத்தில் அதாவது 12.15க்கு மதுரை சென்று விடும்
இந்த ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை நின்று சென்ற தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே துறை இனி தாம்பரத்திலும் தேஜஸ் ரயில் நிற்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
