தொடர்புடைய செய்திகள்
- நளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
- ஸ்டெர்லைட் ஆலை மூடல் – தமிழக அரசுக்கு முழு அதிகாரம் !
- அத்திவரதர் குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!
- காசோலை மோசடி வழக்கு – சிறைக்கு செல்லும் காங்கிரஸ் பிரமுகர் !
- நீட் தேர்வால் நடந்த தற்கொலைகள் – மாணவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு என்ன ?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விலகலா? பெரும் பரபரப்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதால் தஹில் ரமானி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
மிகப்பெரிய நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் மேகாலாயா போன்ற சிறிய மாநிலத்தின் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது அசாதாரணமானது என்று சட்ட நிபுணர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தஹில் ரமானி எதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளார் என்பது குறித்த காரணமும் இதுவரை தெரியவில்லை
இந்த நிலையில் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
