தொடர்புடைய செய்திகள்
- நீட் தேர்வால் நடந்த தற்கொலைகள் – மாணவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு என்ன ?
- ஸ்டெர்லைட் வழக்கில் திடீரென விலகிய நீதிபதிகள்! காரணம் என்ன?
- 16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமல்ல: சட்டத்திருத்தம் செய்ய நீதிமன்றம் ஆலோசனை
- "இந்து கோயில்களை தமிழக அரசு மூடிவிடலாமே" - சென்னை உயர்நீதிமன்றம்
- இந்து கோயில்களை தமிழக அரசு மூடிவிடலாமே - சென்னை உயர்நீதிமன்றம்
காசோலை மோசடி வழக்கு – சிறைக்கு செல்லும் காங்கிரஸ் பிரமுகர் !
காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் அன்பரசுவுக்கு அளிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை சென்னை உயர்நீதிமனறம் உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு, ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை செலவுக்காக, பைனான்சியரிடம் 35 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதைத் திரும்ப காசோலையாகக் கொடுக்க அந்த காசோலை திரும்பியுள்ளது. இதனையடுத்து பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா அன்பரசு, அவரின் மனைவி கமலா அன்பரசு அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு எதிராக 2008ல் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மூவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மணி, அன்பரசு (கமலா அன்பரசு இறந்து விட்டார்) இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் இருவருக்கும் தண்டனையை உறுதி செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
