1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூலை 2021 (15:24 IST)

சென்னையில் 6ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! – போலீஸார் விசாரணை!

சென்னையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரியை சேர்ந்தவர் வெங்கம்மா. கணவரை பிரிந்து வசித்து வரும் இவருக்கு ஒரு மகனும், 12 வயது மகளும் உள்ளனர். சமீபத்தில் துணி மாற்றுவதாக உள்ளே சென்ற சிறுமி ஜெயந்தி நீண்ட நேரமாகியும் வெளியே வராததாக கூறப்படுகிறது.

இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தபோது சிறுமி ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் சமீபத்தில் ஜெயந்தி பூப்படைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட வயிற்று வலியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.