1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai DSP warns public for avoid manja thread in kites

மாஞ்சா பட்டம் விட்டால் குண்டாஸ் பாயும்! – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

Chennai
சென்னையில் மாஞ்சா கயிறுகளை உபயோகித்து பட்டம் விடுவது அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறாக பட்டம் விடுபவர்கள் மீது ‘குண்டாஸ்’ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கண்ணாடி துகள்களை வைத்து தயாரிக்கப்படும் மாஞ்சா நூல்களை பட்டம் விட பயன்படுத்தும் போது சில சமயங்களில் பட்டம் அறுந்து பொதுமக்கள் கழுத்தில் சிக்கி உயிரிழப்பு போன்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட காரணமாகின்றன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் வீடுகளில் முடங்கியுள்ள பல சிறுவர்களும், இளைஞர்களும் மாஞ்சா நூலில் பட்டம் விட தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாஞ்சா நூல்களை கட்டி பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும். மாஞ்சா பட்டம் விடுபவர்கள் ‘குண்டாஸ்’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதுடன் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மெட்ரோ இயங்குமா? வகுப்பட்டுள்ள புது வழிமுறைகள் என்ன?