ஞாயிறு, 1 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (11:17 IST)

ராயபுரம், கோடம்பாக்கத்துடன் டீம் போட்ட திரு.வி.க நகர்: மோசமாகும் சென்னை!

ராயபுரம், கோடம்பாக்கத்துடன் டீம் போட்ட திரு.வி.க நகர்: மோசமாகும் சென்னை!
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. 
 
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,231, திரு.வி.க. நகரில் 1032, தண்டையார்பேட்டையில் 823, அண்ணா நகரில் 719, வளசரவாக்கத்தில் 605 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
ராயபுரம், கோடம்பாக்கத்துடன் டீம் போட்ட திரு.வி.க நகர்: மோசமாகும் சென்னை!