1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chenani meteorological center warns about rain

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை!

வானிலை
அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றி உள்ளதை அடுத்து அடுத்த சில மணி நேரத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது: அந்த மாவட்டங்கள் பின்வருமாறு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தருமபுரி, அரியலூர், காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
உலக பட்டினி நாடுகளில் இந்தியா 101வது இடம்! – அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!