1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:49 IST)

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்திருப்பதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது
 
இன்று பகல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் அது ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2 ஆயிரம் கன அடியாக உயர்த்த பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டபோது சென்னையின் பல பகுதிகளில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது