1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Case filed against Edappadi Palanisamy

திமுகவை எதிர்த்து போராட்டம்... ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு

திமுக
சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியமைத்த நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக கண்டனம் தெரிவித்தது. திமுகவை கண்டித்தும், மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி நேற்று அதிமுக தமிழக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டது.  
 
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்கட்சி தலைவர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். 
 
இந்நிலையில் சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash