1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. c.r.saraswathi said about for quit Nanjil

கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்

nanjil sampath
'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு 'அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , '*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்' என்று கூறினார்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் விலகியது குறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியபோது, 'நாஞ்சில் சம்பத் விலகி போனது வருத்தமளிக்கின்றது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வோம்' என்று கூறினார். ஆனால் நாஞ்சில் சம்பத் கொடுத்து கொண்டிருக்கும் பேட்டியில் அவர் ஆவேசமான கருத்துக்களையும் தினகரன் குறித்து கடுமையாகவும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் மீண்டும் அவர் தினகரனுடன் இணைவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆண்கள் பலாத்காரம் செய்தால், சண்டையிடாமல் சரணடையுங்கள்: டிஜிபி சர்ச்சை பேச்சு...