1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (21:17 IST)

13 பேர் உயிரிழப்புக்கு பின் வெளியான அரசாணையில் உள்நோக்கம் உள்ளது - மு.க.ஸ்டாலின்

13 பேர் உயிரிழப்புக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை வெளியானத்தில் உள்நோக்கம் உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
நாளை தமிழக சட்டசபையில் திமுக சார்பில் எழுப்பப்படும் பிரச்சனைகள் குறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாயகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
13 பேர் உயிரிழப்புக்கு ஸ்டெர்லைர்ட் அலையை மூடும் அரசாணை பிறப்பித்ததில் உள்நோக்கம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவையில் முடிவு எடுத்து அரசாசணை பிறப்பிக்கவில்லை.
 
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆலை மூடப்பட்டு கண்துடைப்பு நடத்தப்பட்டது. 13 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடருவோம் என்று கூறியுள்ளார்.