1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:20 IST)

சந்திரபாபு கைதுக்கு எதிர்ப்பு... சட்டசபையில் விசில் அடித்த பாலகிருஷ்ணா..!

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர சட்டசபையில் தெலுங்கு தேச எம்எல்ஏ நடிகர் பாலகிருஷ்ணா விசில் அடித்து ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஊழல் வழக்கில் சமீபத்தில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது கைதுக்கு தெலுங்கு தேச கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியவுடன் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து விசில் அடித்து பாலகிருஷ்ணா  தனது எதிர்ப்பை தெரிவித்தார். விசிலை ஊதி தனது எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து சபாநாயகர் அவரை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினார். 
 
ஆனாலும் பாலகிருஷ்ணா தொடர்ந்து விசில் ஊதியதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை அடுத்து விதிமுறைகளை மீறி உறுப்பினர் பாலகிருஷ்ணா அநாகரிகமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரித்தார்.
 

Edited by Mahendran