1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Arjun sampathsaid Murugan and Nalini will get Parole

பேரறிவாளன் போலவே முருகன் - நளினிக்கும் பரோல் கிடைக்கும். அர்ஜூன் சம்பத்

arjun sampath
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது போலவே முருகன், நளினி ஆகிய இருவருக்கும் பரோல் கிடைக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்



 
 
நேற்று வேலூர் சிறையில் முருகனை சந்தித்து பேசிவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'சிறையில் மெளன விரதம் இருந்து வந்த முருகன், என்னை பார்த்தவுடன் மெளன விரதத்தை கலைத்துவிட்டு பேசினார். அவர் முக்தி அடைவதற்காக முயற்சி செய்கிறார். அது சிறை விதியின்படி நடக்க வாய்ப்பில்லை என்றாலும் அவருக்கும், நளினிக்கும் மிக விரைவில் பரோல் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்
 
மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள். அவர்கள் கண்டிப்பாக இந்திய மண்ணில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானில் தக்காளி விலை ரூ.300! இந்தியா காரணமா?