தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்றம் கண்டிப்பு.! தெலங்கானா முதல்வர் நிபந்தனையற்ற வருத்தம்.!!
- டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு.! 6 மாதத்தில் முடிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
- தண்டனை கைதிகளின் மனு.! சிறைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..!!
- ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும்: பிரபல நடிகருக்கும் நீதிமன்றம் உத்தரவு..!
பொன் மாணிக்கவேல் முன்ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
பொன் மாணிக்கவேல் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழக கோயில்களில் சிலைகள் மாயமாவது குறித்து வழக்குகளை விசாரணை செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச கும்பலுடன் கூட்டு சேர்ந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக திருவள்ளூர் டிஎஸ்பி ஆக இருந்த காதர் பாட்ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தன்னை பலி வாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிஎஸ்பி காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த பொன்மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
