தொடர்புடைய செய்திகள்
- பாதுகாப்பில் குறைபாடு: வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி!
- பெட்ரோல் விலை உயர்வால் போராட்டம்; ராஜினாமா செய்து கம்பி நீட்டிய பிரதமர்!
- ஜனவரி 16ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தம்: போக்குவரத்து துறை அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!
- பிரதமர் தமிழகத்திற்கு வருவது உறுதி..! – பாஜக பொது செயலாளர் சி.டி.ரவி தகவல்!
- பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு: நாளை விசாரணை!
மதுரையில் பிரதமர் பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு: அண்ணாமலை
பிரதமர் மோடி மதுரையில் பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதற்கு காரணமாக அரசியல் நிகழ்ச்சிள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாகவும் அன்றைய தினம் மதுரையில் பொங்கல் நிகழ்ச்சி விழாவில் அவர் கலந்து கொள்வார் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
